பதினாறு தினங்கள் நடைபெறவுள்ள வருடாந்த மகோற்சவத்தின், பூங்காவனம் 15.08.2013 அன்று, சப்பறத்திருவிழா 18.08.2013 அன்று, தேர் திருவிழா 19.08.2013 அன்றும் அதனைத் தொடர்ந்து தீர்த்தத்திருவிழா 20.08.2013 அன்றும் நடைபெறவுள்ளது. அத்துடன் சந்நிதி கோயிலில் மட்டுமே நிகழும் '' பூக்காரர்'' திருவிழா 21.08.2013 அன்றும் நடைபெறும்.
வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழகத்தின் 60 ஆண்டு விழாவை முன்னிட்டு வெளிக்கழகங்களிற்கு இடையிலான கடல் விளையாட்டுக்களான நீச்சல், படகோட்டம், கட்டுமரம் வலித்தல் ஆகிய போட்டிகள் இன்று காலை மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
கடந்த 15 June 13 அன்று எம்மால், அ.சி.விஸ்ணுசுந்தரம் நினைவு மையத்தின் அனுசரணையுடன் ஆரம்பிக்கப்பட்டிருந்த அன்னபூரணி மாதிரி கப்பலின் வடிவமைப்புக்குரிய வரைபடம் தற்பொழுது பூர்த்தியாகியுள்ளது.
வல்வெட்டித்துறை முத்துமாரியம்மன் அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 0900 மணியளவில், முத்துமாரியம்மன் தர்மகர்த்தா சபையினால் கோலவுடை வழங்கப்பட்டது.
மனுதாரர்களான பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரால் தமிழீழ விடுதலைப் புலிகளினால் சுவீகரிக்கப்பட்டு குமரப்பா, மற்றும் புலேந்திரன் ஆகியோரின் நினைவுத் தூபியாகப் பயன்படுத்தப்பட்ட காணியை வல்வெட்டித்துறை நகர சபை பொறுப்பேற்று பூங்காவை அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவது, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பாரிய குற்றம் எனக் குறிப்பிடப்பட்டே வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்திற்கு..
வடமராட்சி கல்வி வலயத்தினால் நடாத்தப்பட்ட பௌர்ணமி தின நிகழ்வில் க.பொ.த(சா/த) பரீட்சையில் விசேட(9A) சித்தி பெற்ற வடமராட்சிப் பாடசாலை மாணவர்களும், வலயமட்டத்தில் பாடரீதியாக அதியுயர் சித்திவீதத்தனைப் பெற்ற பாடசாலைகளின் பாட ஆசிரியர்களும், கௌரவிக்கும் நிகழ்ச்சி வட இந்துக் கல்லூரியில் கடந்த 22.07.2013 அன்று நடைபெற்றது.
வல்வெட்டித்துறை இளைஞர்கள் நடாத்தும் வல்வைக்கு உட்பட்ட கழகங்களுகிடையிலான உதைபந்தாட்டப் போட்டி இன்று மாலை 04.30 மணியளவில் தீருவில் மைதானத்தில் நடைபெற்றிருந்தது.
யாழ் மாவட்ட பிரதேச செயலகங்களுக்கிடையிலான யாழ் மாவட்ட அரச அதிபர் கிண்ணத்திற்கான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் அரையிறுதிப் போட்டி யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் இன்று நடைபெற்றது.
நடிகர் விஜயகுமாரின் மனைவியும், நடிகையுமான மஞ்சுளா இன்று சென்னையில் காலமானார். இவருக்கு வயது 60. அவருடைய வயிற்றில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக அவர் மரணம் அடைந்ததாக தமிழக செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
வாசகர்களின் வேண்டுகோளிற்கிணங்க எமது இணையதளத்தின் செய்தி, மற்றும் எங்கள் தலையங்கம் பகுதிகளில் 'Comments' பகுதி சேர்க்கப்பட்டுள்ளது. இது வாசகர்களின் எண்ணங்களை எமக்கும் மற்றவர்களுக்கும் தெரிவிக்க ஏதுவாக இருக்கும் என்று நம்புகின்றோம்.
வல்வெட்டித்துறை ஆதிசக்தி வைரவர் ஆலய மகோற்சவம் கடந்த (13-07-13) அன்று ஆரம்பமாகி பத்து தினங்கள் நடைபெற்ற திருவிழாவின் இறுதி நாளான இன்று தீர்த்தத்திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழகத்தின் 60 ஆண்டு விழாவை முன்னிட்டு இன்று வெளிக்கழகங்களிற்கு இடையிலான சைக்கிள் ஓட்ட போட்டி நெடியகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் ஆலயத்தின் முன்றலில் காலை 07.30 மணியளவில் நடைபெற்றது.
யாழ் மாவட்ட பிரதேச செயலகங்களுக்கிடையிலான யாழ் மாவட்ட அரச அதிபர் கிண்ணத்திற்கான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியானது யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் இன்று ஆரம்பமாகியது. இப்போட்டியில் முதலில் பருத்தித்துறை பிரதேச செயலக அணி கரவெட்டி பிரதேச செயலக அணியை எதிர்த்து மோதியது.
வல்வையில் பிறந்து தொடர்ந்தும் வல்வையில் வசித்து வரும் திரு.சக்திவேல் அவர்கள் ஊடகங்கள் பெரிதாக அடிபடாத வல்வையின் ஒரு சமூகசேவையாளர். தனது ஆரம்பக் கல்வியை வல்வை சிவகுரு வித்தியாசாலையிலும் பின்னர் வல்வை சிதம்பரக் கல்லுரியிலும் கல்வி பயின்றுள்ளார். கல்லூரிக் காலங்களில் சாரணர் உட்பட்ட பல துறைகளில் தன்னை ஈடுபடுத்திய இவர்......
நேற்றைய அரை இறுதி போட்டியில் ரேவடி ஐக்கிய இளைஞர் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து இளங்கதிர் இளைஞர் விளையாட்டுக்கழகம் மோதியது. இவ்வாட்டத்தில் ரேவடி ஐக்கிய இளைஞர் விளையாட்டுக்கழகம் 3:2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று இறுதிக்குத் தெரிவானது. அடுத்த ஆட்டத்தில் .......
நாளை யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள மாவட்ட மட்டத்தினாலான உதைபந்தாட்டப் போட்டியில் பருத்தித்துறைப் பிரதேசசபையை பிரதிநிதிப்படுத்தி வல்வை விளையாட்டுக்கழகம் விளையாடவுள்ளது. இப்போட்டி நாளை காலை முற்பகல் 11:00 மணியளவில் இடம்பெறவுள்ளது.
வல்வெட்டித்துறை இளைஞர்கள் நடாத்தும் உள்ளூர் கழகங்களுகிடையிலான உதைபந்தாட்டப் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டங்கள் நேற்று தீருவில் மைதானத்தில் நடைபெற்றிருந்தது. நேற்றைய போட்டியில் உதயசூரியன் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து நேதாஜி விளையாட்டுக்கழகம் மோதியது.
கவிஞர் வாலி இன்று மாலை சென்னையில் உடல்நலக்குறைவால் காலமானார். இவருக்கு வயது 82. T .S . ரங்கராஜன் எனும் இயற்பெயர் கொண்ட வாலி ,1958-ம் ஆண்டு படங்களுக்கு பாடல்கள் எழுதத் துவங்கியிருந்தார். கவிஞர் வாலி இதுவரை ஆயிரம் படங்களைச் சேர்ந்த சுமார் 10000 பாடல்களுக்கு மேல் வரி அமைத்துள்ளார்.
வல்வெட்டித்துறை இளைஞர்கள் நடாத்தும் உள்ளூர் கழகங்களுகிடையிலான உதைபந்தாட்டப் போட்டி நேற்று தீருவில் மைதானத்தில் நடைபெற்றிருந்தது. நேற்றைய முதல் போட்டி தீருவில் மற்றம் சைனிங்ஸ் விளையாட்டுக் கழகங்கக்கிடையில் இடம்பெற்றிருந்தது.
சிதம்பராகல்லூரியின் வளர்ச்சிக்கு முன்னின்று உழைத்த எமது ஊரின் புகழ் பெற்ற கல்விமான்களுள் ஒருவரான R.S.சிவசுப்பிரமணியம் அவர்கள் இறைபதம் எய்திய செய்தி அறிந்து,
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திலுள்ள Long Beach இல் (Los Angels) இன் புற நகர் பகுதியில் queen mary எனப்படும் பழைய நீராவிக்கப்பல் எப்படி நிரந்தரமாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றதோ அதே போல் புதிய அன்னபூரணியும் காட்சிப்படுத்தப்படவேண்டும்.
இன்று ஆடிப்பிறப்பு தினம் இந்துக்களால் அனுஸ்டிக்கப்பட்டது. ஆடிப்பிறப்பையொட்டி இன்று ஆலயங்களில் விசேட வழிபாடுகள் நடைபெற்றது. இன்றைய நாளில் இங்கு யாழ்பாணத்தில் ஆடிக்கூழ் மற்றும் கொழுக்க்கட்டை போன்ற உணவு வகைகளை விசேடமாகச் செய்து குடும்ப விருந்தாக உண்டு மகிழப்படுகின்றது.
சிதம்பராக்கல்லூரி வலையமைப்பு (CWN - Chithambara College Well Wishers Network) ஏற்கனவே அறிவித்தபடி கடந்த 14-07-2013 அன்று லண்டனில் பொதுக் கூட்டமொன்றைக் கூடி புதிய நிர்வாக குழுவைத் தெரிவு செய்துள்ளது. இக்குழுவின் முதல் பணியாக சிதம்பராக்கல்லூரி கலை மாலை, கணிதப்போட்டி பரிசளிப்பு விழாவுக்கான ஏற்பாடுகளை ஆரம்பித்துள்ளதாக CWN அறிவித்துள்ளது.
ஓய்வு பெற்ற ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக் கட்டுப்பாட்டாளார் திரு.R.S.சிவசுப்ரமணியம் (S.L.A.S, JP) அவர்களின் இறுதிக் கிரியைகள் இன்று நடைபெற்றது. பிற்பகல் சுமார் 02:00 மணியளவில் அன்னாரின் கொழும்பு தெகிவளை இல்லத்தில் சமயக் கிரியைகள் நடைபெற்று, இறுதி ஈமைக்கிரியைகள் பிற்பகல் 04:30 மணியளவில் கொழும்பிலுள்ள கனத்தை இந்து மயானத்தில் நடைபெற்றது.
தொண்டைமானாறுசெல்வச்சன்னதி கோவிலில் வாரம்தோறும் வெள்ளிக் கிழமைகளில் சிறப்புப் பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இத்தினங்களில் தொடர்ந்து பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.
பேராசிரியர் திரு.சபா இராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில், CINEC சார்பாக CINEC யாழ் கிளையின் முகாமையாளர் திரு.இலங்கேஸ்வரனும், Vaiswa சார்பில் அதன் தலைவர் திரு.ரஞ்சனதாஸ், இணைப்பாளர் திரு.சீவரத்தினம் ஆகியோரும் சிறப்புப் பேச்சாளாராக Capt.வைத்தியகுமார் அவர்களும், மற்றும் Capt.பாஸ்கரன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
சிறந்த கல்வியறிவும் நிர்வாகத்திறனும் மனித நேயமும் உயரிய பண்புகளும் மற்றும் அனைவருக்கும் உதவும் மனப்பாங்கும் நிறையவே கொண்டு, எமது சிதம்பராக்கல்லூரியின் வளர்ச்சிக்காய் பெரும் அக்கறையுடனும் ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் செயலாற்றி எம்மையும் எமது மன்றத்தையும் வழிநடாத்திச் சென்ற அன்புள்ளத்தை இழந்து, கண்ணீர் சொரிய நிற்கின்றோம்.
வல்வெட்டித்துறை விக்னேஸ்வரா பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டி இன்று (14-07-13) பி. ப 02.45 மணிக்கு, வல்வை உதயசூரியன் கடற்கரையில் திரு .லெ. கிருபாகரன் (தலைவர் விக்னேஸ்வரா பாலர் பாடசாலை) அவர்கள் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
நான்கு மாதங்களுக்கு ஒரு தடவை நடைபெறும் இந்த இரத்ததான நிகழ்வில் இன்று 46 பேர் வரை இரத்ததானம் வழங்கியிருந்தார்கள், இதில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த இராணுவ வீரர்களும், மற்றும் முன்னாள் போராளிகள் அடங்கியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
நேற்று இரவு காலமான ஓய்வுபெற்ற ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக் கட்டுப்பாட்டாளர் திரு.R.S.சிவசுப்ரமணியம் அவர்களின் மறைவையொட்டி சிதம்பராக்கல்லூரி பழைய மாணவர் மன்றம் (கொழும்புக் கிளை) கவிதை அஞ்சலி ஒன்றை வெளியிட்டுள்ளனர்.