"அழகான கடற்கரை ஓர் கவர்ச்சிகரமான சுற்றுலாத் தளம்" திட்டத்தை செயற்படுத்துவதற்கான தேசிய ரீதியிலான கடற்கரையைச் சுத்தப்படுத்தல் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் கடற்கரையினை சுத்தப்படுத்தல் நிகழ்வானது இன்றைய தினம் (23.02.2025) காலை 7.30 மணி முதல் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் ஊரணி கடற்கரையோரம் தொடக்கம் ஊரிக்காடு கடற்கரையோரம் வரை முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தினர், பருத்தித்துறை பிரதேச செயலகத்தினர்,பாதுகாப்பு படையினர், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு கடற்கரையினைத் துப்பரவு செய்தார்கள்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.